Close Menu
    What's Hot

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற சரக்கு வேன்… சாலையில் சென்ற பெண் உயிரிழப்பு…
    தமிழ்நாடு

    17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற சரக்கு வேன்… சாலையில் சென்ற பெண் உயிரிழப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாகாளி. இவர் அரசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி, அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் இரவில் வேலை முடித்து தனது கணவர் மாகாளி மற்றும் ரங்கம்மாள் ஆகியோருடன் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் மையத்துக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர்கள் மூன்று பேரும் கோவை-அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

    அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் திடீரென சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்த மாகாளி உட்பட 3 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதில் சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ரங்கம்மாள், மாகாளி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கோவை மாநகர கிழக்குப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரக்கு வேனை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
    சிறுவனிடம் சரக்கு வேன் ஓட்ட கொடுத்த அந்த வாகனத்தின் உரிமையாளரான பைலட் ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அந்த 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 15 நாட்கள் போக்குவரத்து சரி செய்யும் பணி ஒதுக்கி உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒடிசா அமலாக்கத்துறை துணை இயக்குநர் லஞ்ச வழக்கில் கைது: 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!
    Next Article மானை வேட்டையாடி தலைமறைவான நபர்… 4 மாதங்களுக்கு பிறகு கைது…
    Editor TN Talks

    Related Posts

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    June 21, 2026

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    June 21, 2026

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    “திமுக-அதிமுக ஒன்றானாலும் ஆச்சரியமில்லை”… பரபரப்பைக் கிளப்பும் சிபிஎம் சண்முகம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.