Close Menu
    What's Hot

    சிவசேனாவில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள்..!! சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

    சிறையில் மயங்கி சரிந்த விசாரணைக் கைதி அருணாச்சலம்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

    அடுத்தடுத்து இந்தி எழுத்துகள் அழிப்பு..!! சோழவந்தான் போஸ்ட் ஆபிஸில் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆண் குழந்தை வேண்டி மனைவியை கொன்ற கணவர்..
    தமிழ்நாடு

    ஆண் குழந்தை வேண்டி மனைவியை கொன்ற கணவர்..

    Editor TN TalksBy Editor TN TalksJune 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 06 03 194725
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்த காலத்திலும் ஆண் குழந்தை தான் வேண்டும் என்ற மனநிலையை என்னவென்று சொல்வது, அதுவும் மனைவியை கொலை செய்யக்கூடிய அளவுக்கு செல்லும் பழமைவாத மனநிலை கொண்ட நபர் பொதுவெளியில் உலவுவது சரியல்ல.. முழுமையான பின்னணி என்னவென்றால்…

    திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த பார்வதிக்கும், சிறுமலையிலுள்ள தென்மலை, கருப்பசாமி கோயில் அருகே வசிக்கும் செல்வகுமார் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.

    செல்வகுமார் ஆண் குழந்தை வேண்டும் என்று அடிக்கடி பார்வதியை துன்புறுத்தி உள்ளார். இதே காரணத்தைக் கூறி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பார்வதியை கம்பியால் தாக்கியுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர் கடந்த 29ஆம் தேதி சிறுமலை சென்று பார்வதியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இதனை அறிந்த திண்டுக்கல் மாவட்டம் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் நேற்று இரவு மதுரை, வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் பார்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை எடுத்து பார்வதியின் உறவினர்கள், மாற்றுத்திறனாளிகள், அனைத்து இந்திய மாதர் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து பார்வதியின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பார்வதியை கொலை செய்த கணவர் செல்வகுமாரை கைது செய்ய வேண்டும் எனவும், மூன்று குழந்தைகளுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர். இதனை அறிந்து வந்த திண்டுக்கல் வடக்கு நகர் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செல்வக்குமாரை கைது செய்யும் வரை இறந்த பார்வதியின் உடலை வாங்க மறுத்து அனைவரும் மருத்துவமனையில் உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article45 நிமிடங்களில் தேனி டூ மதுரை.. கல்லீரலோடு பறந்த ஆம்புலன்ஸ்…
    Next Article வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளரிடம் பேசுவது குற்றமா? அண்ணாமலை புகாருக்கு அமைச்சர் மா.சு.பதில்…
    Editor TN Talks

    Related Posts

    சிறையில் மயங்கி சரிந்த விசாரணைக் கைதி அருணாச்சலம்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

    July 23, 2026

    அடுத்தடுத்து இந்தி எழுத்துகள் அழிப்பு..!! சோழவந்தான் போஸ்ட் ஆபிஸில் பரபரப்பு!

    July 23, 2026

    தூத்துக்குடி; இளைஞர் அருணாசலம் மரணம்… என்ன நடந்தது? காவல்துறை விளக்கம்!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிவசேனாவில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள்..!! சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

    சிறையில் மயங்கி சரிந்த விசாரணைக் கைதி அருணாச்சலம்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

    அடுத்தடுத்து இந்தி எழுத்துகள் அழிப்பு..!! சோழவந்தான் போஸ்ட் ஆபிஸில் பரபரப்பு!

    இந்திய ராணுவத் தளபதி அலுவலகத்தில் மத அடையாளம்… சர்ச்சைக்குரிய தர்மா ஓவியம் அகற்றம்

    அதிகரித்த ஆன்லைன் ட்ரோல்.. இன்ஸ்டா-வை விட்டு வெளியேறிய தர்மேந்திர பிரதான் மகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.