Close Menu
    What's Hot

    ஐசிசி கிரிக்கெட் தரவரிசை!. கோலி ரெக்கார்டை நெருங்கும் ரோகித்; 5 ஆண்டுகளுக்குப் பின் டாப் 10-ல் ஜோ ரூட்!

    டி20 கிரிக்கெட்: இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்!

    23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது.. உறுதி செய்த துணை கண்காணிப்பு குழு…
    Featured

    முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது.. உறுதி செய்த துணை கண்காணிப்பு குழு…

    Editor TN TalksBy Editor TN TalksJune 3, 2025Updated:June 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    43741352 mullai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முல்லைப் பெரியாறு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த டிசம்பர் மாதம் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த மத்திய கண்காணிப்பு குழு மற்றும் துணை கண்காணிப்பு குழு ஆகிய இரண்டும் கலைக்கப்பட்டது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் புதிய கண்காணிப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவிற்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு கடந்த 15 தினங்களாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 130 அடிக்கும் மேலாக உள்ளது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை புதிய கண்காணிப்பு துணைக் குழுவினர்,இன்று முதல் முறையாக அதன் இயக்குனர் கிரிதர் தலைமையில், தமிழக அரசின் சார்பில் தலைமை பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு அணை செயற்பொறியாளர் செல்வம் மற்றும் கேரள அரசு தரப்பில் தலைமை பொறியாளர் லியன்ஸ் பாபு, உதவி பொறியாளர் ஜிசித் ஆகியோர் அடங்கிய துணை கண்காணிப்பு குழுவினர் அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    மெயின் அணை,பேபி அணை, மதகுகளின் இயக்கம் ,கேலரி, கசிவுநீர் உள்ளிட்ட அனைத்தையும் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில் அணையின் நீர்மட்டம் 130.45 அடிக்கு ஏற்ப கசிவு நீர் நிமிடத்திற்கு 52.12 லிட்டர் என கணக்கீடு செய்தனர். மேலும் அணையில் உள்ள 13 மதகுகளில் 3, 6, 9ஆகிய 3 மதகுகளை இயக்கி சரி பார்த்தனர். மதகுகளின் இயக்கம் சீராக இருந்தது. இதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதை துணை கண்காணிப்பு குழுவினர் உறுதிப்படுத்தினர்.

    பின்னர் தேக்கடியில் உள்ள முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அணில் ஜெயினுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
    மேலும் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் போது முதன்மை கண்காணிப்பு குழுவில் ஆலோசனைகளை பெறவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக கட்சிகள் கமலுக்கு ஆதரவு தரவேண்டும் – மணியரசன் வலியுறுத்தல்
    Next Article ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக வென்றது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்..
    Editor TN Talks

    Related Posts

    ஐசிசி கிரிக்கெட் தரவரிசை!. கோலி ரெக்கார்டை நெருங்கும் ரோகித்; 5 ஆண்டுகளுக்குப் பின் டாப் 10-ல் ஜோ ரூட்!

    July 23, 2026

    டி20 கிரிக்கெட்: இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்!

    July 23, 2026

    23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடக்கம்!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐசிசி கிரிக்கெட் தரவரிசை!. கோலி ரெக்கார்டை நெருங்கும் ரோகித்; 5 ஆண்டுகளுக்குப் பின் டாப் 10-ல் ஜோ ரூட்!

    டி20 கிரிக்கெட்: இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்!

    23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடக்கம்!

    நீட் தேர்வு முறைகேடு எதிர்ப்பு போராட்டம் தீவிரம்: டெல்லியில் காவல்துறை- போராட்டக்காரர்கள் இடையே மோதல்; கண்ணீர்ப்புகை வீச்சு!

    ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்தார் முதலமைச்சர் விஜய்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.