Close Menu
    What's Hot

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி மீண்டும் கேள்வி…
    இந்தியா

    தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி மீண்டும் கேள்வி…

    Editor TN TalksBy Editor TN TalksJune 7, 2025Updated:June 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20250410140346 Rahul Gandhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகாராஷ்ட்ர சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலின் போது மாலை 5 மணியளவில் பதிவான சிசிடிவி காட்சிகளை வெளியிட முடியுமா என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

    மகாராஷ்ட்ர மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில் முதலாவதாக தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவை மத்திய அரசு மாற்றி அமைத்தது குறித்து கேள்வி எழுப்பினார். இரண்டாவதாக போலியான வாக்காளர்களை சேர்த்தது. மூன்றாவதாக வாக்கு சதவிதம் அதிகமானது. நான்காவதாக போலி வாக்குகள் அதிகரித்தது என குற்றஞ்சாட்டி இருந்தார்.

    இதற்கு நேரடியாக தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. மாறாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பலரும், மகாராஷ்ட்ர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே போன்றவர்கள் பதில் கூறி இருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.

    அதில், நீங்கள் (தேர்தல் ஆணையம்) அதிகாரபூர்வமாக கையெழுத்து இடவேண்டியவர்கள் பதில் கூறாமல், இடைத்தரர்கள் போன்றவர்கள் மூலமாக அதுவும் மிகவும் முக்கியமான பிரச்னைக்கு பதில் கிடைப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று கூறியுள்ளார். உங்களிடம் மறைக்க எதுவும் இல்லையென்றால், எனது கட்டுரையில் உள்ள கேள்விகளுக்கு பதிலளித்து அதை நிரூபிக்கவும்:

    * மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான சமீபத்திய தேர்தல்களுக்கான ஒருங்கிணைந்த, டிஜிட்டல், இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிடுதல்

    * மகாராஷ்டிரா வாக்குச் சாவடிகளில் இருந்து மாலை 5 மணிக்குப் பிறகு அனைத்து சிசிடிவி காட்சிகளையும் வெளியிடுதல். இதனை தவிர்க்கும் செயல் உங்கள் நம்பகத்தன்மையைப் பாதுகாக்காது. உண்மையைச் சொல்வது நல்லது என்று ராகுல் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆராய்ச்சி மாணவருக்கு நம்மாழ்வார் பெயரில் விருது அறிவித்த ஆளுநர்…
    Next Article இழப்பீடு கோரி மாம்பழ விவசாயிகள் போராட்டம்
    Editor TN Talks

    Related Posts

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    June 21, 2026

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    June 21, 2026

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.