Close Menu
    What's Hot

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜாதி பேதம் பேசும் ஆசிரியர் மீது பள்ளி மாணவிகள் புகார் – கோவையில் பரபரப்பு!
    தமிழ்நாடு

    ஜாதி பேதம் பேசும் ஆசிரியர் மீது பள்ளி மாணவிகள் புகார் – கோவையில் பரபரப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksJune 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 06 09 135328
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை, கந்தேகவுண்டன்சாவடி (க.க. சாவடி) அரசு உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் முருகனுக்கு எதிராக பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

    அங்கு பயிலும் மாணவிகளை தவறான முறையில் தொடுதல், ஜாதி அடிப்படையில் பேதப் பிரிவு செய்து நடத்துதல் போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதாக புகார்கள் கூறப்படுகின்றன.

    இந்தச் சம்பவம் மாணவர்கள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தப் பள்ளியில் 11 வயதுடைய மாணவி, 6 ம் வகுப்பில் படித்து வருவதாகவும், அங்கு பணியாற்றும் முருகன் ஆசிரியர் அந்த மாணவியிடம், நீங்கள் எல்லாம் குப்பை வேலைக்குத் தான் தகுந்தவர்கள் என அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், சகோதரனின் தலைமுடியை பிடித்து மேஜையில் அடித்ததாகவும் தெரிவித்து உள்ளார். மேலும், நீங்கள் படிப்பது சரியில்லை என கூறி தனியாக வகுப்பறையில் கதவின் ஓரத்தில் உட்கார வைத்ததாகவும், மாணவி கூறி உள்ளார்.

    இதுகுறித்து மாணவியின் குடும்பத்தினர் முதன்மை கல்வி அதிகாரியிடம் புகார் அளித்ததோடு, கோவை மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து மனு அளித்து உள்ளனர்.

    மாணவர்களின் உடல் மற்றும் மன நலத்திற்கு இத்தகைய செயல்கள் தீங்கு விளைவிக்கக் கூடியவை என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், புகார் அளித்தால் அவ்வளவு தான் என மாணவிகளை மிரட்டி உள்ளாராம் அந்த ஆசிரியர் முருகன். இது மாணவியரின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறது என பெற்றோர் கவலை தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    Coimbatore school controversy Government school harassment Tamil Nadu caste discrimination schools Teacher caste abuse complaint TN ஆசிரியர் ஜாதி பேதம் கோவை அரசு பள்ளி கோவை மாணவிகள் புகார் பள்ளி மாணவிகள் மீது தொந்தரவு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது?
    Next Article தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு.
    Editor TN Talks

    Related Posts

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    April 11, 2026

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    Trending Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    April 11, 2026

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.