Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மதுரை முருக பக்தர்கள் மாநாடு மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி மனு தாக்கல்.
    தமிழ்நாடு

    மதுரை முருக பக்தர்கள் மாநாடு மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி மனு தாக்கல்.

    Editor TN TalksBy Editor TN TalksJune 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tamil News lrg 3941245
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும்- நீதிபதி

    மனுதாரர் மனு குறித்து 12ஆம் தேதிக்குள் உரிய முடிவு எடுக்க வேண்டும் காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

    காவல்துறை மனுவினை பரிசீலனை செய்யும் வரை நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை செய்யலாம் ஆனால் பூஜைகள் எதுவும் நடத்தக்கூடாது – நீதிபதி

    பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சம்பவம் போன்று நடந்தால் என்ன செய்வது – அரசு தரப்பில் வாதம்.

     

    மதுரை முத்துகுமார் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு.

    இந்து முன்னணி அமைப்பு சார்பில் வருகிற ஜூன் மாதம் 22-ம் தேதி மதுரை ரிங் ரோடு, பாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் பக்தியை வளர்க்க முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெற இருக்கிறது.

    இந்த வளாகத்திற்குள்,முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது.

    முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து பூஜைகள், நிகழ்ச்சிகள் நடத்தி 22ஆம் தேதி மாநாடு நடத்த உள்ளோம் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்

    இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.

    அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 12 நாள் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது 3 நாள் நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள பரிசீலிக்கப்படும் மேலும் மனுதாரர் தரப்பில் அனுமதி கோரிய விண்ணப்பத்தில் முறையான தகவல் தரவில்லை
    மனு தந்த பின்பு காவல்துறை தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான பதில் இல்லை நிகழ்ச்சியில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்?
    முக்கிய பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்கிறார்களா?
    என்ற கேள்விக்கு பதில் தர மறுத்துவிட்டனர் அவ்வாறு இருக்கக்கூடிய நிலையில் நிகழ்ச்சிக்கு எவ்வாறு போதிய பாதுகாப்பு வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

    அப்பொழுது நீதிபதி இந்து முன்னணி தரப்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் ஆகம விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா என கேள்வி எழுப்பினார்.

    மனுதாரர் தரப்பில் ஆகம விதிகளை பின்பற்றி தான் நிகழ்ச்சிகள் நடத்தப்படுது என தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி புகழேந்தி.

    மாநாடு பொதுக்கூட்டம், தனியார் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது எனவே காவல்துறை பாதுகாப்பு கேட்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் குறிப்பிட்ட தொகையை செலுத்த ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்றும்

    காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளித்தால் தானே குறிய பாதுகாப்பு வழங்க முடியும் எனவே மாநாட்டுக்கு அனுமதி கூறிய மனு தொடர்பாக காவல்துறையினரிடம் முறையான எழுத்துப்பூர்வமான பதில் அளிக்க வேண்டும் அதன் அடிப்படையில் காவல்துறை பன்னிரண்டாம் தேதிக்குள் முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் மனுதாரர்கள் தரப்பில் மாநாடு காண முன் ஏற்பாடுகளை செய்யலாம் ஆனால் எவ்வித பூஜைகளும் செய்யக்கூடாது.

    என உத்தரவிட்டு வழக்கு விசாரணை 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருவண்ணாமலை கோவில் தாமரை குளம் ஆக்கிரமிப்பு – உடனடி அகற்றம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
    Next Article மறக்குமா நெஞ்சம்… ஆனால் இழப்பீடு ரூ.50,000!
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.