Close Menu
    What's Hot

    30 வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக சுறுசுறுப்பாக இருங்கள்!. சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

    2025-ன் சிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா!. பி.டி.உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

    பிஃபா உலகக் கோப்பை 2026!. ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தி ஜெர்மனி திரில் வெற்றி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சங்கராபுரம் ஆய்வாளர் பணியிடை நீக்கம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!
    தமிழ்நாடு

    சங்கராபுரம் ஆய்வாளர் பணியிடை நீக்கம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksJune 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1086593
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சங்கராபுரம் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 5 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டுவைச் சேர்ந்த சக்தி என்பவருக்கு எதிராக கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, சக்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் விரைவாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென 2024 மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, அந்த உத்தரவுப்படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்து ஜூன் 4 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, விசாரணை அதிகாரியான சங்கராபுரம் ஆய்வாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

    இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஜூன் 3ம் தேதி மின்னணு முறையில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நாளில், நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக அவசர அவசரமாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், முழுமையாக விசாரணை நடந்ததா?என சந்தேகிப்பதாகவும் நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.

    மேலும், 2024ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி ஏன் செயல்படவில்லை என்ற விளக்கமும் அளிக்காததால், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதி, உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமறக்குமா நெஞ்சம்… ஆனால் இழப்பீடு ரூ.50,000!
    Next Article கிணற்றில் கொட்டிய அபாயகரமான கழிவு : சூலூர் பீடம் பள்ளி மக்கள் புகார்
    Editor TN Talks

    Related Posts

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    June 20, 2026

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    June 20, 2026

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    30 வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக சுறுசுறுப்பாக இருங்கள்!. சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

    2025-ன் சிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா!. பி.டி.உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

    பிஃபா உலகக் கோப்பை 2026!. ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தி ஜெர்மனி திரில் வெற்றி!

    உலகக் கோப்பை 2026!. நெதர்லாந்தின் ‘கோல் மழை’.. நிலைகுலைந்தது சுவீடன்!

    நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு!. 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.