Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழா.. சாதிய அடையாளங்கள் கூடாது என நீதிமன்றம் உத்தரவு…
    ராசிபலன்

    நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழா.. சாதிய அடையாளங்கள் கூடாது என நீதிமன்றம் உத்தரவு…

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1907587 nellaiapper
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் தேர் திருவிழாவில் சாதிய அடையாளங்களை பறைசாற்றும் வண்ண ரிப்பன்கள், வாண வேடிக்கைகள் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது.. சாதி ரீதியான படுகொலை திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பொது இடங்களில் சாதி ரீதியான அடையாளங்களை வெளிப்படுத்துவது தான் மூல காரணமாக இருந்து வருகிறது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் தேர் திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது இந்த திருவிழா வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் கலந்து கொள்கின்றனர்.

    இந்த திருவிழாவில் வருடா வருடம் சாதிரீதியான வண்ணங்களை கொண்ட பட்டாசுகள் வெடிக்க செய்வதும், பல்வேறு சமுதாய தலைவர்களை வாழ்க வாழ்க என முழக்கமிடுவதும் ஒருசிலரை ஒழிக என்று கூறுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் திருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் தங்கள் சாதிரீதியான டி சர்ட்டுகளை அணிவதும், சாதிரீதியான ரிப்பன்கள் அணிவதும் தொடர்கதையாகி உள்ளது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் மிகுந்த சிரமமும் ஏற்படுகிறது.

    எனவே சாதிமோதல்களை உருவாக்கும் இந்த செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். திருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் கலர் கலராக பட்டாசுகள் வெடிப்பதற்கும் சாதி ரீதியான படமோ பெயரோ கொடியோ காண்பிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம்,நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில். ஏற்கனவே சாதிய ரீதியான அடையாளங்கள் பயன்பாடு குறித்த விதிகள் உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் இணைந்து இந்த திருவிழாவின் போது எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    caste identity ban in religious events caste symbols banned in temple festival Nellai temple news Nellaiappar Temple car festival social equality Tamil Nadu Tamil Nadu court order on caste temple chariot festival news
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொடைக்கானலில் யானை நடமாட்டம்: முக்கிய சுற்றுலா தலங்களுக்குத் தற்காலிகத் தடை
    Next Article யார் செய்தாலும் தப்பு தான்… மாரி செல்வராஜ் ஓபன் டாக்…
    Editor TN Talks

    Related Posts

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025

    ஜோதிட நாள்காட்டி 31.12.2025 | மார்கழி 16

    December 31, 2025

    12 ராசிகளுக்கான ராசிபலன்கள் ! இன்று உங்களுக்கு நாள் எப்படி?

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.