தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து வருகிறார் இசையமைப்பாளர் அனிரூத். தமிழ் தாண்டி பிற மொழிகளில் இசையமைத்து வரும் அனிரூத், தொடர்ந்து பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தனது சிறுவயது அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,

”சிறிய வயதில் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாசிக்க செல்லும் போது ரூ.500சம்பளமாக கொடுத்துள்ளார்கள். அப்போது இனம் புரியாத ஒரு சந்தோஷம் மனதில் ஏற்படும். சில நிகழ்வுகளில் சம்பளம் தராமல் வெறும் வெற்றிலை, பாக்கு மட்டும் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி விடுவார்கள்.

இப்போது கோடிகளில் சம்பளம் மாறிவிட்டாலும், பரபரப்பாக இசைப்பணியில் மூழ்கி கிடந்தாலும், முன்பு இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. என்னதான் வேலையில் பரபரப்பாக இருந்தாலும் சிறுவயது சந்தோஷத்தை மட்டும் மறக்கவே முடியாது” என கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version