தமிழ் இசையமைப்பாளர்களில் தற்பொழுது கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் அனிருத் கூடிய விரைவில் ஒரு புதிய இசை கம்பெனியை திறக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு, கேரளா, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அனிருத்துக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றன.
அவருடைய பாடல்கள் இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது. குறிப்பாக அவர் நடத்தும் இசை கச்சேரி இந்தியாவை கடந்து வெளிநாடுகளில் ஹவுஸ் புல் ஆவதை நாம் பார்த்திருக்கிறோம்.

அதேசமயம் இசை கம்பெனிகளை பொருத்தவரையில் தற்பொழுது அது சம்பந்தமான வணிக வளர்ச்சி மிக நன்றாக இருக்கிறது.
தமிழ் திரையுலகை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ரகிட்ட என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் ஒரு இசை கம்பெனியை திறந்து இருக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் பாடல்கள் நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அனிருத் வெகு விரைவில் தனக்கென ஒரு இசை கம்பெனியை திறக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்று இதன் மூலம் தெரிய வருகிறது.

அனிருத் இசை அமைப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜனநாயகன், மேஜிக், தி பேரடைஸ், கிங், ஜெய்லர் 2, டிசி மற்றும் அரசன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. Spotify நிறுவனத்தில் உள்ள இசையமைப்பாளர்கள் மத்தியில் இந்த ஆண்டு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த பாடல்கள் தான் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான விருதும் அவர் இன்று பெற்று இருக்கிறார்.
