நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குனர் ரவி நெலகுடிட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பான்-இந்தியா’ திரைப்படமான #DQ41-ன் முதல் கட்டப் படப்பிடிப்பு மிகச் சிறப்பாக நிறைவடைந்துள்ளது.

இப்படத்தின் முக்கியமான காட்சிகள் அடங்கிய முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டப் படப்பிடிப்பு பணிகளைத் தொடங்க படக்குழு தீவிரமாகத் தயாராகி வருகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இந்தத் திரைப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதல் மற்றும் உணர்ச்சிகரமான நாடகமாக உருவாகும் இப்படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாகப் பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் தீக்ஷித் ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு, ராவ் ரமேஷ் மற்றும் வினாலி பட்நாகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இந்தத் திரைப்படம் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காகத் துல்கர் சல்மானின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
