சமூக வலைதளங்களில் எப்போதும் துணிச்சலாகக் குரல் கொடுத்து வரும் பாடகி சின்மயி, வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்ததற்காக வாழ்த்து தெரிவித்த ரஜினி மற்றும் கமலை நேரடியாகச் சாடியுள்ளார்.

ஞானபீட விருது பெறும் மூன்றாவது தமிழர் வைரமுத்து ஆவார். குறிப்பாக, கமல்ஹாசனின் வாழ்த்துப் பதிவை டேக் செய்து, “சினிமாவில் பெரும் செல்வாக்குடன் இருக்கும் ஆண்கள் அரசியலுக்கு மாறும்போது, பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டோம் எனப் புகாரளிக்கும் பெண்களைக் கண்டும் காணாமல் புறக்கணிக்கிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார். திரையுலகில் பெண்களுக்கு எதிரான அநீதிகளைக் கண்டுகொள்ளாமல் விருதுகளை மட்டும் கொண்டாடுவது வேதனை அளிப்பதாக அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

https://x.com/Chinmayi/status/2032779783591854298?

இதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்துச் செய்திக்கும் சின்மயி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். “அய்யோ புரியவே புரியாதா?” என ரஜினியை நோக்கி பதிவிட்டுள்ள அவர், குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பொதுவெளியில் அங்கீகாரம் அளிப்பது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://x.com/Chinmayi/status/2032855497825726796?

‘மீ டூ’ (Me Too) விவகாரத்தில் வைரமுத்து மீது சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் பாலியல் புகார்களை முன்வைத்துள்ள நிலையில், முன்னணி நடிகர்களின் இந்த வாழ்த்துக்கள் தற்போது இணையதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version