சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம், தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடி என்ற பிரமாண்ட மைல்கல்லை எட்டிப் பிடித்துள்ளது. இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வெளியான சில நாட்களிலேயே திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு திரைப்படம் தமிழகத்தில் இவ்வளவு பெரிய தொகையை வசூலிப்பது இதுவே முதல்முறை என்பதால், இது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக மாறியுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ‘கருப்பு’ திரைப்படம் இதுவரை ரூ.280 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளத்துடன் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் தொடர்ந்து வலுவான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இந்த வசூல் சாதனை மூலம், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பிளாக்பஸ்டர் படங்களின் பட்டியலில் ‘கருப்பு’ இணைந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version