ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்துக்கு ‘வாரணாசி’ எனத் தலைப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் படக்குழுவினர் மட்டுமே பங்குபெற உள்ளனர். இந்த நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையினை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

இப்படத்துக்கு ‘வாரணாசி’ எனத் தலைப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தலைப்பின் உரிமை இன்னொருவரிடம் இருந்திருக்கிறது. அவரை தேடிப்பிடித்து அவரிடம் இருந்து அனைத்து மொழி உரிமையினையும் ராஜமவுலி படக்குழு கைப்பற்றி இருக்கிறது. இதனால் ‘வாரணாசி’ தான் தலைப்பு என்று உறுதியாகி இருப்பதாக பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

இந்தியாவில் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இப்படம் அமைந்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். விரைவில் வெளிநாடுகளில் அடுத்தகட்ட படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version