ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. தனது அழகால் 15 வயதிலேயே திரையுலகில் நுழைந்து, தனது எதார்த்தமான நடிப்பாலும், கவர்ச்சியான நடனத்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரம்பா.

1992-ல் வெளியான ’சர்கம்’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்பா. ’உழவன்’ என்ற படத்தின் மூலம் தமிழிலும் கால் பதித்தார். ப்படத்தை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

’அழகிய லைலா’ என்ற பாடலில் பாவாடையை காற்றில் பறக்கவிட்டு அவர் போட்ட ஆட்டம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.கடைசியாக பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்த ரம்பா, 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த 90ஸ் இளைஞர்களின் கனவு கன்னி, திருமணம், குழந்தைகள் என வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது பாடல் நிகழ்ச்சிகள் உட்பட EVENT MANAGEMENT செய்வதோடு தனியார் சேனல்களில் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். தொடையழகி என அழைக்கப்படும் ரம்பா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version