குன்னூர் நகர மன்ற கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் படத்தின் அருகே திமுகவினர் ஸ்டாலின் படத்தையும் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி படத்தையும் மாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த 30 வார்டுகளில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு நேற்று நடைபெற்றது.

தலைவர் சுசிலா, மற்றும் துணை தலைவர் வாசிம் ராஜா ஆணையாளர் கிருஷ்ணா ராம் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் துவங்கிய போது தற்போது
தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தலைவரும் துணை தலைவரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து கூட்டத்தை துவங்கினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மீண்டும் திமுக கவுன்சிலர்கள் தவெக முதலமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படம் அருகே திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் அதிகாரியிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், திமுக நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர்.

இதனால் கோபமடைந்த குன்னூர் நகராட்சி ஆணையாளர் மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் தங்களது பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தையும் வைத்தனர். இதனால் குன்னூர் நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version