Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»தலைமைச் செயலாளர், தேனி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட்! நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி
    மாவட்டம்

    தலைமைச் செயலாளர், தேனி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட்! நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Consumer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர், தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து தேனி நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்  பவுளசியா பானு. இவர் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு முறையாக கட்டணம் செலுத்தி, குடிநீர் இணைப்பு பெற்றிருந்தநிலையில், ஊராட்சி நிர்வாகத்தால் இவரது வீட்டில் இருந்த குடிநீர் இணைப்பு சட்டவிரோதமாக துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    மீண்டும் குடிநீர் இணைப்பை வழங்கக்கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் அவர் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்தநிலையில், இதுகுறித்து தேனி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் கடந்த 23.04.2024ல் பவுசியா பானு வழக்கு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தேனி நுகர்வோர் குறைதீர் ஆணையம் பவுசியா பானுவிற்கு குடிநீர் குழாய் இணைப்பை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும், மன உளைச்சலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ.60 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என்று 10.06.2025 அன்று தேனி நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை செயல்படுத்தாதநிலையில் பவுசியா பானு மீண்டும் தேனி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகினார். இதனைத் தொடர்ந்து உத்தரவை நிறைவேற்றாததால், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர், தேனி மாவட்ட ஆட்சியர், பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர், பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளர், பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 6 பேருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் பிடிவாரண்டு பிறப்பித்து தேனி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    பொதுமக்களின் அடிப்படை வசதிகளில் ஒன்றான குடிநீர் குழாய் இணைப்பை சட்டவிரோதமாக துண்டித்துநிலையில் அதனை திரும்ப கேட்டு நீதிமன்றம் வரை பெண் ஒருவர் போராடியும் கூட குடிநீர் இணைப்பு வழங்காமல் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முதல் அரசு முதன்மைச் செயலாளர், தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதெலங்கானா: ஒரேநாளில் 37 நக்சல்கள் ஆயுதங்களுடன் சரண்!
    Next Article ஐகோர்ட் வாயில்கள் இன்றிரவு முதல் நாளை இரவு வரை மூடல்!
    Editor TN Talks

    Related Posts

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025

    நாமக்கல்லில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்.. ஒரு லட்சத்து 8 வடைமலை சாற்றி வழிபாடு!

    December 19, 2025

    ரஜினி பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய அமைச்சர்… இதுதான் காரணமா?

    December 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    டிடிவி, ஓபிஎஸ்-சை அதிமுக கூட்டணியில் இணைப்பது குறித்து இபிஎஸ்சுடன் கோயல் பேச்சா? நயினார் மறுப்பு

    December 23, 2025

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.11 லட்சம் பேர் விண்ணப்பம்! வரும் 27, 28- 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்!

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.