கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலில் வெட்டப்பட்ட இளைஞரின் கை துண்டான நிலையில் 10 மணி நேர அறுவை சிகிச்சை செய்து கையை ஒட்ட வைத்து நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயில் விழாவில் நடந்த மோதலில் இளைஞர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு இடது கை மணிகட்டு பகுதி துண்டானது. இந்த நிலையில் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் துண்டான கையும் கொண்டு வரப்பட்டது. அவருக்கு இடது கையை 10 மணி நேர அறுவை சிகிச்சை செய்து மீண்டும் பொருத்தி இயங்கும் நிலைக்கு கொண்டு வந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா இசக்கி. இவருக்கு வயது 21. இவர் ஓட்டுநராக பணி செய்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலின் போது பிச்சையா இசக்கியின் இடது கை அரிவாளால் வெட்டப்பட்டு மணிகட்டு பகுதியில் இருந்து துண்டாகி விழுந்தது. படுகாயம் அடைந்த அவரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு வந்து சேர்த்தனர்.
