Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»மீண்டும் வெள்ளம்? பீதியில் வேப்பம்பட்டு கிராமம்
    மாவட்டம்

    மீண்டும் வெள்ளம்? பீதியில் வேப்பம்பட்டு கிராமம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025Updated:November 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    veppam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள நிலையில், வெள்ளம் வரக்கூடும் என்ற பீதியில் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராம மக்கள் உள்ளனர்.

    வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள ராமகிருஷ்ணாநகர், டன்லப் நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் ஆண்டுதோறும் மழைகாலத்தில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. ராமகிருஷ்ணா நகரில் சுமார் 3 அடி உயரம் வெள்ளம் தேங்கும் நிலை உள்ளது. இதற்கு, மழைநீர் செல்லும் வழியில் சிலர் அடைப்புகளை ஏற்படுத்தி இருப்பதே காரணமாக கூறப்படுகிறது.

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களாக இருந்த ஆல்பி ஜான் வர்கீஸ், பிரபுசங்கர் ஆகியோர் வேப்பம்பட்டு கிராமத்திற்கு நேரிடையாக வந்து வெள்ள பாதிப்பை சரி செய்து வந்தனர். குறிப்பாக, ஆல்பி ஜான் பலமுறை நேரில் வந்து ராமகிருஷ்ணா நகரை பார்வையிட்டு சரி செய்து கொடுத்துள்ளார்.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால், வேப்பம்பட்டு கிராம மக்கள், மீண்டும் வெள்ளம் வரக்கூடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஆதலால் புதிதாக வந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப் உடனடியாக நேரில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வெள்ளம் நேரிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காணப்படாமல், ரயில்வே தண்டவாளத்திற்கு கீழ் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் வெளியேறும் வகையில், வடிகால் ஏற்படுத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் ராமகிருஷ்ணா நகர், டன்லப் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வேப்பம்பட்டு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    flood 2

    அதேபோல், மழையால் ராமகிருஷ்ணா நகரின் பல தெருக்களில் ஏற்கெனவே போடப்பட்ட சாலைகள் இருக்கும் இடமே தெரியாமல் சேதமடைந்து விட்டன. அதேபோல், சில தெருக்களில் மட்டுமே சிமெண்ட் சாலைகள் போடப்பட்டு, பிற தெருக்களில் சிமெண்ட் சாலைகள் போடப்படாமல் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இடரை சந்தித்து வருகின்றனர்.

    எனவே ராமகிருஷ்ணா நகரில் அனைத்து தெருக்களிலும் சீராக புதிதாக சிமெண்ட் சாலைகள் அமைத்து தரவும், சேதமடைந்த சாலைகளுக்கு பதில் புதிய சாலைகள் அமைத்து தர வேண்டுமெனவும் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉன் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது – அன்புமணிக்கு சாபம் விட்ட ராமதாஸ்
    Next Article ராமேசுவரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – பொதுமக்கள் கடும் அவதி!
    Editor TN Talks

    Related Posts

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.11 லட்சம் பேர் விண்ணப்பம்! வரும் 27, 28- 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்!

    December 23, 2025

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    டிடிவி, ஓபிஎஸ்-சை அதிமுக கூட்டணியில் இணைப்பது குறித்து இபிஎஸ்சுடன் கோயல் பேச்சா? நயினார் மறுப்பு

    December 23, 2025

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.11 லட்சம் பேர் விண்ணப்பம்! வரும் 27, 28- 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்!

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.