Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    தமிழக அரசியலில் சாதி-மத பிரிவினை..!! முதல்வர் விஜய்க்கு அப்பாவு சரமாரி கேள்விகள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»ராமேசுவரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – பொதுமக்கள் கடும் அவதி!
    மாவட்டம்

    ராமேசுவரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – பொதுமக்கள் கடும் அவதி!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rndddd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிட்வா புயல் தாக்கம் காரணமாக ராமேசுவரத்தில் தொடர் கனமழையால் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதுடன், வீடுகளுக்குள் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    டிட்வா புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று மதியம் தொடங்கிய மழை இன்று மாலை வரையும் தொடர்ந்து பெய்து வருகிறது. ராமேசுவரம் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் கனமழையும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. பாம்பன் துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிடம் பகுதிகளில் 7 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. தொடர் கனமழையால் ராமேசுவரம் அண்ணாநகர், காந்திநகர், திருவள்ளுவர் நகர், நடராஜபுரம், பாம்பன் சின்னப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து தேங்கியுள்ளது.

    வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வைத்திருந்த வீட்டு உபயோக பொருட்கள், கட்டில் பாத்திரம் தண்ணீரில் மிதக்கின்றது. தண்ணீரில் இருந்து பாதுகாக்க குழந்தைகளுடன் கட்டிலில் அமர்ந்து வாழ்க்கை நடத்துகின்றனர்.

    hindutamil prod%2F2025 11 29%2F2e1n6gre%2FWhatsApp Image 2025 11 29 at 6.19.46 PM

    பெரும்பாலான குடும்பங்கள் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து வீடுகளை சுற்றி இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    இரவு நேரங்களில் தேங்கியுள்ள மழை நீரில் இருந்து பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீடுகளுக்குள் நுழைவதால் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ராமேசுவரம் நகராட்சி, பாம்பன், மண்டபம் ஊராட்சி நிர்வாகங்கள் தேங்கியுள்ள மழை நீரைவெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் அண்ணாநகர், திருவள்ளுவர் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்கள், வீடுகளில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்கள் தங்கள் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகள், ஆடுகளை தூக்கிக்கொண்டு மேடான வேறு பகுதிக்கு செல்கின்றனர்.

    வானம் இருட்டி மேகமூட்டத்துடன் காணப்படுவதால் பாம்பன் சாலை பாலத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. கடந்த 5 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. தொடர்மழையால் ராமேசுவரம் உள்ளிட்ட கடலோர பகுதிகள் மற்றும் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் வெள்ளம்? பீதியில் வேப்பம்பட்டு கிராமம்
    Next Article அதி கனமழை: 2 நாள்களுக்கு ரெட் அலர்ட்
    Editor TN Talks

    Related Posts

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    June 2, 2026

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    June 2, 2026

    தமிழக அரசியலில் சாதி-மத பிரிவினை..!! முதல்வர் விஜய்க்கு அப்பாவு சரமாரி கேள்விகள்..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    தமிழக அரசியலில் சாதி-மத பிரிவினை..!! முதல்வர் விஜய்க்கு அப்பாவு சரமாரி கேள்விகள்..!!

    எதிர்த்து நின்னா கொலைதான் பதிலா..?? இதுதான் ஆட்சி மாற்றமா..?? கொந்தளித்த இபிஎஸ்..!!

    6 மாசம் தான் டைம்..!! தமிழக நகரங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தும் முயற்சி..!! தவெக அரசு அதிரடி..!!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.