தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னை வந்தடைந்தார்.

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குவதற்கான அறிகுறியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார். இதற்காக, தமிழகப் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் இன்று மதியம் கேரளாவிலிருந்து சென்னை வந்தடைந்தார், கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு (ஆளுநர் மாளிகை) சென்றடைந்தார். இன்று மாலை சரியாக 3:30 மணி அளவில் ஆளுநரைச் சந்திக்கும் விஜய், தனது கட்சியின் 108 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்க உள்ளார்.

சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையான 118 இடங்கள் தற்போது கைவசம் இல்லை என்றாலும், தேர்தலில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்கத் தங்களை அழைக்குமாறு விஜய் கோரிக்கை வைக்கவுள்ளார். இதற்கிடையே, மற்ற கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதால், மீதமுள்ள 5 உறுப்பினர்களின் ஆதரவை விரைவில் திரட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தவெக உள்ளது. ஆளுநரின் சந்திப்பிற்குப் பிறகு தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் பதவியேற்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version