Close Menu
    What's Hot

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»EXCLUSIVE»திமுகவின் ஊழல் பணத்தை டெலிவரி செய்யும் ஏடிஎம் மெஷின் தான் செந்தில் பாலாஜி – தவெக தலைவர் விஜய் விமர்சனம்
    EXCLUSIVE

    திமுகவின் ஊழல் பணத்தை டெலிவரி செய்யும் ஏடிஎம் மெஷின் தான் செந்தில் பாலாஜி – தவெக தலைவர் விஜய் விமர்சனம்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    G13C77Rb0AE3ajQ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுகவின் ஊழல் பணத்தை டெலிவரி செய்யும் ஏடிஎம் மெஷின் தான் செந்தில் பாலாஜி என்று கரூரில் பேசிய தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார். கரூரில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது..

    என்னை பாதுகாப்பாக அழைத்து வந்த காவல்துறைக்கு நன்றி. அமராவதி ஆற்றங்கரையில் உள்ள ஊர் கரூர்.
    ரொம்ப முக்கியமான டெக்ஸ்டைல் மார்க்கெட் இது, மிகவும் சிறப்பு வாய்ந்தது. கரூரை பெருமையாக சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு. அதுல எந்த மாற்றக் கருத்தும் இல்ல. ஆனா சமீபத்தில் ஒரு விஷயத்துக்கு ரொம்ப பேரு வாங்குச்சு. அதுக்கு யார் காரணம்? அதை பின்னாடி பேசுறேன்.

    இப்போ தமிழ்நாடு அரசு கரூருக்கு கொடுத்த வாக்குறுதிகளை பார்ப்போம். பேரீச்சை வளர்ப்பு சிறப்பு திட்டம்.  தேர்தல் வாக்குறுதி எண் 81. பேரீச்சை மரத்தை விடுங்க, குறைந்தபட்சம் பேரீச்சை விதையாச்சும் கண்ணுல காட்டுனாங்களா?. துபாய் குறுக்கு சந்தை கதைதான். அடுத்தபடியா கரூரில் விமான நிலையம் கொண்டு வரப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 448-ல் சொல்லி இருந்தாங்க. ஆட்சியே முடியப் போகுது. நான்கரை ஆண்டுகள் முடிந்து விட்டது. இப்போது போய் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள். ஐயா அமைச்சரே இதுதானா உங்க டக்கு.

    விமான நிலையம் வந்தால் ஜவுளி தொழில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் பரந்தூரைப் போல மக்களை பாதிக்கக் கூடிய வகையில் வரக்கூடாது. மக்களை பாதிக்காமல் விமான நிலையம் கட்டினால் நன்றாக இருக்கும். மணல் கொள்ளை கரூரின் தீராத பிரச்னை. மணல் கொள்ளை கரூரை வறண்ட மாவட்டமாக மாற்றி விட்டது. சட்டவிரோத மணல் குவாரிகளால் கரூர் அழிஞ்சிக்கிட்டு வருது. இதற்கு பதில் இருக்கா சி.எம்.சார்?  11 மணிக்கு திமுக பதவியேற்ற உடன் தாராளமாக மணல் அள்ளலாம் என்று பேசியவர்கள் யார் என்று தெரியும்ல?..  நீங்கள் எல்லாம் கனவு காண்கிற காவிரி தாய்க்கும், கரூருக்கும் விடுதலை கிடைக்கும்..

    தமிழ்நாட்டோட 3-வது பெரிய ஏரி பஞ்சப்பட்டி. ஆயிரம் ஏக்கர். அந்த ஏரி நல்லா இருந்தா, விவசாயம் செழிப்பா இருக்கும். விவசாயம் செழிப்பா இருந்தா குடும்பங்கள் சந்தோஷமா இருக்கும். ஆனா அதனை சீரமைக்காம தண்ணீர் வர்ற வழியில் தடைகளை போட்டு வச்சி இருக்காங்க. தவெக ஆட்சிக்கு வந்ததும் பஞ்சப்பட்டி ஏரிக்கு நல்லகாலம் பிறக்கும். அதேபோல கரூரின் சாயக்கழிவுகளை சுத்திகரிக்க அறிவியல் பூர்மான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இப்போ முக்கியமான விஷயத்துக்கு வர்றேன். இந்த பகுதியில் மந்திரி, மந்திரி என்று ஒருவர் இருந்தார். இப்போ அவர் மந்திரி இல்ல. ஆனாலும் மந்திரி. யாரைச் சொல்றேனு தெரியுதா? பாட்டிலுக்கு 10 ரூபா, பாட்டிலுக்கு 10 ரூபா (இதனை பாடலாக பாடினார்). சமீபத்தில் முப்பது பேர் விழா ஒண்ணு நடந்ததுல, சாரி முப்பெரும் விழா. அதுல அந்த மாஜி மந்திரிய உச்சி முகர்ந்து நம்ம சிஎம் சார் பேசுனறாரு. ஆனா எதிர்கட்சித் தலைவரா இருக்கும்போது என்ன பேசினாருனு யூ டியூப்ல போய் பாருங்க. இவரைப் பத்தி என்ன சொல்றாங்க தெரியுமா? திமுகவின் ஊழல் பணத்தை டெலிவரி செய்யக்கூடிய ஏடிஎம் மெஷின் தான் அவருனு சொல்றாங்க.

    காவல்துறை கையைக் கட்டிக் கொண்டு இருக்கிறதா? ஆட்சி மாறும், காட்சி மாறும். அதிகாரம் எங்கள் கையில் வரும், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇரண்டில் ஒரு கை பார்த்து விடுவோம்..
    Next Article மரண ஓலம் கேட்கும் கரூர் – விஜய் பிரச்சாரத்தில் 29 பேர் பலி?
    Editor TN Talks

    Related Posts

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    July 15, 2026

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    July 15, 2026

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    “‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”

    காமராஜரை சொந்தம் கொண்டாடும் தவெக.. இது பொருத்தமில்ல..!! ராஜேந்திர பாலாஜி ஆவேசம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.