Close Menu
    What's Hot

    குவியல் குவியலாக 10 ரூபாய் நாணயங்கள்!. பைக் வாங்கி அசத்திய நபர்!. தெலங்கானாவில் நெகிழ்ச்சி!

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன்ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சீனாவை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு..!! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!
    Featured

    சீனாவை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு..!! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!

    editor5By editor5July 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 33 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடான சீனா, திடீர் வானிலை மாற்றத்தால் பெரும் சீற்றத்தை எதிர்கொண்டுள்ளது. கனமழை, பயங்கர நிலச்சரிவு மற்றும் சூறாவளி ஆகியவை நாட்டின் பல பகுதிகளை நிலைகுலைய வைத்துள்ளன. இந்த இயற்கைப் பேரிடர்களில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கன்சு மாகாணத்தின் லோங்னான் கிராமத்தில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் மண் சரிவு ஏற்பட்டதால் 33 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். உடனடியாகச் செயல்பட்ட மீட்புப் படையினர் இடிபாடுகளிலிருந்து 21 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ள 12 பேரை மீட்க மீட்புக் குழுக்கள் தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

    இப்பகுதியில் மழை தொடர்வதால் மீட்புப் பணிகள் சிரமமான நிலையில் உள்ளன. ஹூபெய் மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி, இடி மின்னல் மற்றும் பலத்த காற்று 11 பேரின் உயிரைப் பறித்தது. ஒருவர் இன்னும் காணாமல் போயுள்ளார். இந்தப் புயலால் 4,800க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ‘மேசக்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றொரு பகுதியில் பெருவெள்ளத்தை உருவாக்கியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

    ஒட்டுமொத்தமாக சுமார் 54,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்விநியோகம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பேரிடரைச் சமாளிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங், அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளார். “மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுங்கள்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதனால் மீட்புப் படைகள், இராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் உச்சக்கட்ட பணியில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே, வெள்ளம் சூழ்ந்த ஒரு பண்ணையிலிருந்து சுமார் 900 பாம்புகள் தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படையினர் பாம்புகளைப் பிடிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். சீனாவின் பல மாகாணங்களில் வானிலை எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது. இயற்கைப் பேரிடர்களுக்கு எதிரான நீண்டகாலத் திட்டங்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.

    china flood landslide
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சரின் திடீர் செயல் ; பாதுகாப்பை பலப்படுத்த அரசு நடவடிக்கை
    Next Article ”மருத்துவ இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும்” – மத்திய, மாநில அரசுகளுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
    editor5

    Related Posts

    குவியல் குவியலாக 10 ரூபாய் நாணயங்கள்!. பைக் வாங்கி அசத்திய நபர்!. தெலங்கானாவில் நெகிழ்ச்சி!

    July 8, 2026

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    July 8, 2026

    குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன்ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குவியல் குவியலாக 10 ரூபாய் நாணயங்கள்!. பைக் வாங்கி அசத்திய நபர்!. தெலங்கானாவில் நெகிழ்ச்சி!

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன்ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

    நிகர்நிலைப் பல்கலை. அந்தஸ்து – தவறுக்கு காரணமானவர்கள் மீது  என்ன நடவடிக்கை?  – அரசுக்கு அண்ணாமலை கேள்வி

    டி20 அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்… கம்பீரின் புதிய வியூகம் என்ன..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.