கோவை மாவட்டம் மதுக்கரையில் முதலமைச்சர் விஜய் குறித்து முகநூலில் அவதூறு பதிவு  செய்த  திமுகவினர்  2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குரும்பபாளையம் பகுதியில் புதிய நியாய விலை கடை திறப்பதற்கு பிளக்ஸ் பேனர் வைப்பது  தொடர்பாக திமுக மற்றும் தவெகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து திமுகவினர் முகநூல் பக்கத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த  தவெக நிர்வாகி  பாலாஜி மதுக்கரை காவல் துறையில் புகார் அளித்தார்.

இந்த புகார் அடிப்படையில் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த திமுகவினர் விஷ்ணுபிரபு , மனோஜ்குமார் , மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் மீது மதுக்கரை போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் திருச்சியில் இருந்த  விஷ்ணுபிரபு,  மனோஜ்குமார் ஆகிய இருவரை மதுக்கரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மணிகண்டணை போலீசார் தேடி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version