முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வரும் ஹாஜாமுகைதீன் நேற்றைய முன் தினம் மூன்று நபர்களால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த ஹாஜாமுகைதீன், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் முத்துப்பேட்டை காவல்துறையினர் சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டர். அதில் ஹாஜாமுகதீனை தாக்கியது முத்துப்பேட்டையை சேர்ந்த அப்துல்பாசித், சபீக் அகமது, முகமது யூனிஸ் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவான 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றது தெரியவந்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version