Close Menu
    What's Hot

    நள்ளிரவில் வீடு வீடாக கதவைத் தட்டி மர்ம நபர்கள் அட்டகாசம்..!! குடியாத்தத்தில் பரபரப்பு..!!

    அரசு பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்..!! 12ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து..!! சக மாணவன் வெறிச்செயல்..!!

    திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!. தடுக்க வந்த தாயை கொலை செய்த நபர் கைது!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆடி மாதம் வந்தாலே தள்ளுபடி ஏன்..?? பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம்..!!
    Featured

    ஆடி மாதம் வந்தாலே தள்ளுபடி ஏன்..?? பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம்..!!

    editor5By editor5July 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 18 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் ஜூலை 17-ம் தேதி ஆடி மாதம் பிறக்கவுள்ள நிலையில், பல ஜவுளிக் கடைகள் ஏற்கெனவே 15 நாட்களுக்கு முன்பாகவே ஆடித் தள்ளுபடி விற்பனையை தொடங்கிவிட்டன. இந்தச் சீசன் சலுகை இன்று தமிழகம் முழுவதும் பிரபலமாக இருந்தாலும், அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.

    தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. ஆடிப் பெருக்கு, அம்மன் கோயில் திருவிழாக்கள் என பல விழாக்கள் இம்மாதத்தில் நடைபெறும். ஆனால், திருமணம், காதுகுத்து, வீடு கட்டுதல் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படும். புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைக்கும் சம்பிரதாயங்களும் உண்டு. இதனால் ஜவுளி, நகை உள்ளிட்ட விற்பனை பெருமளவில் குறையும்.

    முந்தைய காலங்களில் விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்தது. “ஆடிப் பட்டம் தேடி விதை” எனும் பழமொழி இதைச் சுட்டும். ஆடி மாதத்தில் நெல் நடவு, கரும்பு நடவு போன்ற பணிகளுக்காக விவசாயிகள் தங்கள் கையிருப்பை முழுவதுமாகச் செலவழித்துவிடுவர். கடன் வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், ஜவுளிக் கடை உரிமையாளர்களுக்கு ஆடி மாதம் பெரும் சவாலாக இருந்தது. சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையை மாற்ற வேண்டும் என வியூகம் வகுத்தனர் கடை உரிமையாளர்கள். ஆண்டுதோறும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்த பழைய ஸ்டாக் துணிகளை “ஆடிக் கழிவு” எனப் பெயரிட்டு, சற்றுக் குறைந்த லாபத்தில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்தனர். இதைப் பொதுமக்களிடையே விளம்பரப்படுத்தினர்.

    எதிர்பார்த்ததை விட பெரும் வரவேற்பு கிடைத்தது. மக்கள் தள்ளுபடி விலையில் துணி வாங்க கடைகளுக்கு ஆர்வமுடன் வந்தனர். ஒரே நேரத்தில் இரண்டு நோக்கங்கள் நிறைவேறின. ஒன்று, தேங்கிய ஸ்டாக் காலியானது. இரண்டாவது, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு புதிய ஸ்டாக் வாங்க பணம் கிடைத்தது.

    இன்று ஆடித் தள்ளுபடி 5 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை விரிவடைந்துள்ளது. பெருநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை அனைத்து ஜவுளிக் கடைகளிலும் இந்தச் சலுகை ஜோராக நடைபெறுகிறது. நவீன காலத்தில் கடன் அட்டைகள், EMI வசதிகள் இருந்தாலும், ஆடித் தள்ளுபடியின் ஈர்ப்பு குறையவில்லை.

    இந்தத் தள்ளுபடி விற்பனை, பொருளாதார ரீதியாக ஜவுளித் தொழிலுக்கு உயிர் கொடுத்தது மட்டுமல்லாமல், நுகர்வோருக்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆடி மாதத்தின் பாரம்பரியத்துடன், வணிக யுக்தியும் இணைந்து உருவான இந்தத் தள்ளுபடி பாரம்பரியம், இன்றும் தமிழக வணிக உலகில் தொடர்கிறது.

    aadi month discount
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு அலுவலகங்களில் இனி லஞ்சமா.. வாய்ப்பே இல்ல..!! ஊழல் ஒழிப்பில் தமிழக அரசு அதிரடி..!!
    Next Article எ.வ.வேலு வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
    editor5

    Related Posts

    நள்ளிரவில் வீடு வீடாக கதவைத் தட்டி மர்ம நபர்கள் அட்டகாசம்..!! குடியாத்தத்தில் பரபரப்பு..!!

    July 15, 2026

    அரசு பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்..!! 12ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து..!! சக மாணவன் வெறிச்செயல்..!!

    July 15, 2026

    திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!. தடுக்க வந்த தாயை கொலை செய்த நபர் கைது!.

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நள்ளிரவில் வீடு வீடாக கதவைத் தட்டி மர்ம நபர்கள் அட்டகாசம்..!! குடியாத்தத்தில் பரபரப்பு..!!

    அரசு பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்..!! 12ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து..!! சக மாணவன் வெறிச்செயல்..!!

    திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!. தடுக்க வந்த தாயை கொலை செய்த நபர் கைது!.

    கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கும் விவகாரம்..!! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!!

    சோனம் வாங்சுக் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!! டெல்லி ஐகோர்ட்டுக்கு ஓடிய வழக்கறிஞர்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.