வேலூர்: முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விருதம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம், கிளித்தான் பட்டறை, வன்டறந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்கள், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், கேஸ் அடுப்புகள் மற்றும் புடவைகள், சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சி விருதம்பட்டில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ஜெய், உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் பேசிய அவர், “நிறைய எதிர்ப்புகளையும் தடைகளையும் தாண்டி ‘ஜனநாயகன்’ திரையரங்குகளில் வெளியானது. படம் மொபைலில் வெளியானாலும் தளபதி ரசிகர்கள் தியேட்டரில்தான் பார்ப்போம் என்று உறுதியாக இருக்கிறார்கள். ‘ஐ அம் வெயிட்டிங்’ என காத்திருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும், “ஒரு எரிமலை தன்னுள் அனைத்தையும் அடக்கி வைத்திருந்து வெடிப்பது போலவும், ஒரு விதை நீண்ட காலம் காத்திருந்து பெரிய மரமாக மாறுவது போலவும், நமது அண்ணன், தளபதி, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இன்று முதல்வராக உயர்ந்துள்ளார். இந்த ஐந்தாண்டு காலம் மட்டுமல்ல, காலம் காலமாக அவரது ஆட்சி தொடர வேண்டும். நீங்கள் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருங்கள்” என்று வலியுறுத்தினார்.

தவெகவினரின் இந்த சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சி பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version