இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு கூடுதல் கலால் வரி விதித்துள்ளது.

கடந்த பல மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. உள்ளிட்டவைகளின் விலைகளில் மாற்றமின்றி தொடர்ந்து வந்தது.
ஈரான், அமெரிக்கப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததோடு, வரத்தும் குறைவானதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு நிலவியது.
இந்த நிலையில் மே 15ஆம் தேதி முதல் எரிபொருள்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை லிட்டருக்கு 3 ரூபாய் 10 காசுகள் வரை உயர்ந்தது.
இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் விலை உயர்வை வாபஸ் பெறும்படி வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரியை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மீதுலிட்டருக்கு ரூ.3 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.16.50 கலால் வரியை உயர்த்தியுள்ளது. இதே போல் விமான எரிபொருள் மீது லிட்டருக்கு ரூ.16 சிறப்பு கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பயன்பாடு பெட்ரோல், டீசல் கலால் வரியில் எவ்வித மாற்றமும் இல்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version