உள்ளாட்சித் தேர்தலுக்காக கூடுதல் சின்னங்களை ஒதுக்கீடு செய்து மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பல அதிரடி மாற்றங்களை தந்துள்ளது. 60 ஆண்டு கால தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்தனர். முதல்முறையாக தேர்தல் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றநிலையில், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத சூழலில், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. அண்மையில் வார்டு வரையரை உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது. இந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்காக கூடுதல் சுயேட்சை சின்னங்களை பயன்படுத்தும் நடவடிக்கைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. 30க்கும் அதிகமான வேட்பாளர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதால் கூடுதல் சுயேட்சை சின்னங்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாவதாக கருதுகிறது.

அனைத்து உள்ளாட்சி தேர்தல்களுக்கும் பொதுவாக பயன்படுத்தக்கூடிய கூடுதல் சுயேட்சை சின்னங்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பாலம், கேக், கால்குலேட்டர், கேரட், கேமரா, கிரிக்கெட் ஸ்டெம்ப், டீசல் பம்ப், தபால் உறை, வறுசட்டி, ஐஸ்கிரீம், ரம்பம், மிக்ஸி, பிரஷர் குக்கர், கோடாரி, கண்ணாடி டம்ளர், கத்தரிக்கோல் ஆகிய 20 சின்னங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்து மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version