Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அதிருப்தியில் அண்ணாமலை: உதயமாகிறதா புதிய கட்சி..?? இழுக்கும் ஆதரவாளர்கள்..!!
    Featured

    அதிருப்தியில் அண்ணாமலை: உதயமாகிறதா புதிய கட்சி..?? இழுக்கும் ஆதரவாளர்கள்..!!

    editor5By editor5May 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 05 26 at 2.07.07 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாஜகவில் அதிருப்தியுடன் இயங்கும் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி துவங்கியே ஆக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றனர்.

    பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) தொடர்ந்து அதிருப்தியில் இருக்கும் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையை முன்னிறுத்தி புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தேசியத் தலைமை, அதிமுகவுடன் கூட்டணி வலியுறுத்தியதால் அண்ணாமலையை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன்பிறகு அவர் கட்சியின் உள் நிகழ்வுகளில் பங்கேற்பைக் குறைத்துக்கொண்டார்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளை அவர் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலின்போது சில தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோதும் அதை ஏற்க மறுத்த அண்ணாமலை, மாறாக 95 தொகுதிகளில் தீவிரமாகப் பிரசாரம் செய்தார். எனினும், அந்தத் தேர்தலில் பாஜக பெரும் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், அண்ணாமலையின் தலைமைத்துவத்தின் மீது இளைஞர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை நிலவுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பாஜக மாநில தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் விஷ்ணு பிரசாத், “அண்ணாமலை மீது இளைஞர்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவரது தலைமையில் எது நடந்தாலும் அது எழுச்சியாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார். இதற்கிடையில், மே 26 முதல் 29 வரை பாஜக தேர்தல் தோல்வி குறித்த ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அண்ணாமலை இந்தக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை எனவும், அந்த நாட்களில் தென்கொரியா பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தச் சூழலில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ‘புதிய தமிழகம் ஜனதா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்க வலியுறுத்தி வருகின்றனர். ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறங்களைக் கொண்ட கொடியில் அண்ணாமலையின் உருவத்துடன் கூடிய வடிவமைப்புகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஊழலற்ற நிர்வாகம், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகளுக்கு நேரடி உதவி, அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், ‘அகில இந்திய அண்ணாமலை நற்பணி மன்றம்’ என்ற பெயரிலும் பதிவுகள் செய்யப்படுவதாகத் தெரிகிறது. இதுவரை அண்ணாமலை இந்த முயற்சிகள் குறித்து எந்தவிதமான ஆதரவு அல்லது எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் தனி அரசியல் பாதையில் செல்லும் முடிவில் இருக்கலாம் என அவரது ஆதரவாளர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக அரசியலில் இளைஞர்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றுள்ள அண்ணாமலையின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை நாடு முழுவதும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஸ்டாலினும் ஒரே நாளில் சாதிக்கவில்லை; 5வது ஆண்டில்தான் நிறைவேற்றினார்!. சிபிஎம் சண்முகம் அதிரடி!
    Next Article தவெக வாக்குறுதியை மீறுவதா? – பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் கம்யூனிஸ்ட் அதிருப்தி
    editor5

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.