90 பிச்சர்ஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் தலைவர் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா பாண்டியன், ஆரவ்கிஸ்சர், கீர்த்தீகா பாசு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ளது ’அருள்வான்.’ ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படம், காடர் இன மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையும், கல்விக்காக அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்களை குறித்து எடுக்கப்பட்டுள்ளது.

‘அருள்வான்’ திரைப்படம் முழுக்க முழுக்க மலைவாழ் மக்களின் கதை என்பதால் இன்று பொள்ளாச்சி சக்தி திரையரங்கில் மலைவாழ் மக்களுக்கு என சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி பகுதியில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து திரைப்படத்தை பார்த்தனர்.

திரைப்படத்தில் வரும் காடர் இன மக்களின் வாழ்க்கை முறை குறித்த காட்சிகளை கண்டு  ஆரவாரத்துடன் கைதட்டையும், வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் படும் வேதனைகள் நிறைந்த காட்சிகளை கண்டு கண்ணீர் விட்டனர். மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை குறித்தும், கல்விக்காக மக்கள் படும் போராட்டங்கள் குறித்தும் எடுக்கப்பட்ட திரைப்படம் தங்கள் வாழ்க்கையை வெளியுலகுக்கு எடுத்துவரப்பட்டுள்ளது என்றும், இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் தற்போது நாங்கள் அவதிப்பட்டு வரும் காட்சிகளாகவே இருக்கிறது என்று திரைப்படம் பார்த்த மலைவாழ் மக்கள் கண்ணீருடனும் நெகிழ்ச்சிடனும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version