தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளதுதில் முதலமைச்சரின் முடிவு தவறாக இருக்காது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  மேகதாது விவாகரத்தில் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வதாகவும்,  பாஜக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதே காவிரி பிரச்சினையை பேசி தீர்த்து இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

காவிரி சிக்கல் தொடர்பாக நேரடியாகப் பேசவேண்டும் எனவும், சட்டரீதியாகப் பேச வேண்டும் எனவும் இருவேறு கருத்துக்களை சொல்வதாகவும், இதில் எது சரியாக இருக்கும் என்பதை முதல்வர் முடிவு செய்வார் எனவும் தெரிவித்தார்.

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் விவகாரம் குறித்த கேள்விக்கு,  தமிழகத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசர் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அப்பொழுது தமிழகத்தை சேர்ந்தவரை ஏன் மத்திய பிரதேசத்தில் போட்டு இருக்கின்றீர்கள் என யாரும் கேட்கவில்லை எனக் கூறியவர்,  இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மதம் ,மொழி ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு மாநிலத்திற்கு மாநிலம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

திரைப்பட தயாரிப்பாளரும் நாட்டின் குடிமகன் தானே. முதல்வர் என்ன நினைக்கிறாரோ அந்தக் கருத்துக்களைதான்  அவர் வெளியிட முடியும் முதல்வர் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் டெல்லி பிரதிநிதி வெளியிட முடியும் அதை தவிர வேறு கருத்துக்களை சொல்ல முடியாது என்றார்.

ஒருவரை தேர்வு செய்த உடனேயே அவருக்கு தகுதி இருக்கின்றதா இல்லையா என சொல்லிவிட முடியாது எனக் கூறியவர்,  டெல்லி பிரதிநிதியாவதற்கு அரசியலில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தகுதி என்று கிடையாது. சமூக பணிகளில் இருப்பவர்களும் செய்யலாம். ஆனால் அவர்கள் யாரும் முன்வருவதில்லை எனத் தெரிவித்தார்.

சட்டமன்றம் சினிமா பாணியில் நடப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தவர், எதிர்க்கட்சித் தலைவருக்கு பேசுவதற்கு நேரம் தருவதாகக் கூறியும் அவர் ஏன் வெளிநடப்பு செய்தார் எனக் கேள்வி எழுப்பினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version