தவெக ஆட்சி அமைய விடாமல், திமுகவும், அதிமுகவும் சதி செய்ததாக முதலமைச்சர் விஜய் பகீரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தான் வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கலந்து கொண்டார்.
தனது பிரசாரப் பேருந்தினை மேடையாக்கி அதன்மீது நின்றபடி நன்றி தெரிவித்து பேசிய விஜய், தவெக ஆட்சி அமைய விடாமல் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் சதி செய்ததாக திமுக, அதிமுகவைச் சுட்டிக்காட்டி குற்றம்சாற்றினார்.
அவங்கதான் ஆட்சியிலயே இல்லையே, அவங்கள ஏம்பா குறை சொல்றேன்னு கேப்பாங்க. வேர்ல வென்னிய ஊத்திக்கிட்டுப் போனவங்கள வெளிச்சம்போட்டுக் காட்டாம பின்ன என்ன சொல்லுவாங்க என கேள்வி எழுப்பிய விஜய், மக்களிடம் இதையெல்லாம் நாம்தான் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும் என்றார்.
மக்களுக்காக நாம் வேலை செய்து கொண்டிருக்க எதிர்க்கட்சிகளோ குதிரை பேரம் செய்கிறோம் என தப்புத் தப்பாக கதையடித்து விடுவதாகவும், கூறியவர் அடுத்து சொன்னதுதான் பகீர்.
இந்த தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் அதாங்க திமுகவும் மற்றும் பலரும் ஒண்ணா சேர்ந்துகிட்டு திருட்டுத்தனமா, யாருக்கும் தெரியாம ஒரு மூலையில உக்காந்து பேரம் பேசி, கூட்டு சேர்ந்து ஆட்சி அமைச்சி கொள்ளையடிக்கத் திட்டம் போட்டங்க..
அது ஏன் தெரியுமா? உங்களோட இந்த டிவிகே ஆட்சி அமைஞ்சா, அவங்க பொழப்பே போயிடும். அந்த கொள்ளையடிக்கிறது, லஞ்சம், ஊழல் எல்லாமே கதம் கதம். அதான் இந்தக் காரணம்.
திமுக இப்ப தீய சக்தி மட்டுமில்ல, மக்கள விட்டு ரொம்ப தூரமான போன தூர சக்தி, ஓர ச்கதி, கோர சக்தி, பார சக்தி… எப்ப நீங்க தீர்ந்து போன சக்தியோட சேர்ந்துகிட்டு ஆட்சி அமைக்கணும்னு நெனைச்சீங்களோ, அப்பவே இந்த திமுக தூர்ந்துபோன சக்தியாவும் மாறிடுச்சு என்றும் திமுக எல்லாம் தவெக பற்றிப் பேசாலாமா எனவும், விமர்சித்தார்.
அம்பது, அறுபது வருஷமா இருந்த சாதியை, மதத்தை, காசு கொடுத்து ஓட்டு வாங்குவதை இந்த தேர்தலில் உடைத்திருப்பதாகவும் கர்ஜித்தார்.


