அரபிக்கடலில் நிலவும் காற்று சுழற்சியின் காரணமாக, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்  ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்குவது வழக்கம். ஆனால், தற்போதைய வானிலை சூழலின்படி இம்முறை இரண்டு நாட்கள் தாமதமாக, ஜூன் 3-ஆம் தேதியை ஒட்டி பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பருவமழை தாமதமாக தொடங்கினாலும் மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஜூன் 5-ஆம் தேதிக்கு மேல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நல்ல மழையைக் கொடுக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வானிலை ஆய்வாளர் தாமதம் ஏற்படும் என கணித்திருந்தாலும், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என கணித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே மே 26-ஆம் தேதி வாக்கில் கேரளாவில் தொடங்கும் என அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த மே 16-ஆம் தேதியே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை சென்றடைந்துவிட்டது. இது வழக்கத்தை விட 6 நாட்கள் முன்கூட்டிய நிகழ்வாகும்.

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாகவே (சராசரியாக 92%) இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் மதிப்பிட்டுள்ளது. இதனால் விவசாயம் மற்றும் நீர்நிலைகள் நிரம்புவதில் சில சவால்கள் ஏற்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version