இந்தியாவில் பலகட்ட பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலர் மௌனம் காத்து வருகின்றனர். அந்த வகையில் நீட் தாள் கசிவு தொடங்கி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு வரை பல பிரச்னைகள் மக்கள் மத்தியில் மேலோங்கி காணப்படுகிறது. அப்படி இருக்க, எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவின் எந்த தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். இதனை விமர்சிக்கும் விதமாக,
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ NEET தாள் கசிவில் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதறுகிறது…
4வது முறையாக பெட்ரோல் விலை உயர்ந்து சாமானிய மக்கள் தினமும் சுமையடிக்கிறார்கள்…
ஆனா நம்ம “எப்போதும் பேசுவோம்” தலைவர்கள் மட்டும் Deep silence mode-ல!
உதயநிதி ஸ்டாலின்…
பழனிசாமி…
ஒருத்தராவது ஒரு வார்த்தை சொன்னாங்களா?
மக்கள் பிரச்னை வந்தா மவுனம்…
அரசியல் வந்தா மைக்கை பிடிக்க போட்டி!
தமிழக மக்கள் கேட்கிறார்கள்:
இந்த அமைதிக்கு காரணம் என்ன?
அல்லது… “மேலிருந்து” பேசக்கூடாது என்று Order வந்திருச்சா?
என கேள்வி எழுப்பியுள்ளார்.
