சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தவும், சில திமுக மாவட்டச் செயலாளர்களை நீக்கவும் திமுக தலைமை திட்டமிட்டு இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் தோல்விக்கு பிறகு திமுகவில் அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழு மேற்கொண்ட நேரடி விசாரணையின்போது, திமுக மாவட்ட செயலாளர்கள் மீது பலரும் கடும் புகார் அளித்துள்ளதாகவும், அதன் எதிரொலியாகவே அவர்கள் மீது தலைமை உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது திமுக மாவட்ட செயலாளர்கள்ன் கீழ் 2 முதல் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதனை 2 முதல் 4 தொகுதிகளாக குறைக்க தலைமை ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சில மாவட்ட செயலாளர் செயல்பாடுகள் மீது திருப்தி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கள ஆய்வு அறிக்கை தலைமைக்கு சமர்பிக்கப்பட்டதும். அதன்படி சில மாவட்ட செயலாளர்களை மாற்றவும் தலைமை முடிவு என தகவல்.

தற்போது உள்ள 78 எனும் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 100 மேல் உயர்த்தவும் திமுக தலைமை திட்டமிட்டு வருவதாகவும். புதிதாக நியமிக்கப்படும் மாவட்ட செயலாளர்களில் நீண்ட நாட்களாக கட்சிக்காக உழைக்கும் நிர்வாகிகள்,  இளைஞர்கள், பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பரிசீலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version