Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுகவினர் எப்போதும் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை..!! திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!
    Featured

    திமுகவினர் எப்போதும் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை..!! திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!

    editor5By editor5June 6, 2026Updated:June 6, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 13 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுகவினர் என்றும் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது சமீபத்திய சட்டமன்றத் தேர்தல். அதில் திமுக தலைமையிலான கூட்டணி, எதிர்பாராத பெரும் பின்னடைவைச் சந்தித்தது. மக்கள் ஆதரவு கணிசமாகக் குறைந்த நிலையில், புதிய அரசியல் சக்தியான நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால், 118 இடங்கள் தேவையான பெரும்பான்மைக்கு 10 இடங்கள் குறைவாக இருந்ததால், தமிழ்நாடு முதல் முறையாக தொங்கு சட்டமன்றத்தை எதிர்கொண்டுள்ளது.

    தி.மு.க. 59 இடங்களுடன் கணிசமான இழப்பைச் சந்தித்தது. அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. 2021 தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக பாராட்டப்பட்டிருந்தாலும், மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றம் இந்த முடிவுக்கு வழிவகுத்தது.

    அதிர்ச்சியளிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தோல்வியைத் தழுவினார். இந்தத் தேர்தல் முடிவு தி.மு.க.வுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும், தலைவர்களும் மாற்றுக் கட்சிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்கிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைந்த விழாவில், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

    “பவள விழாவைக் கொண்டாடும் தி.மு.க.வில் இணைய வந்துள்ளீர்கள். வழக்கமாக ஆளும் கட்சியை நோக்கியே மக்கள் செல்வார்கள். ஆனால், எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க.வை நோக்கி நீங்கள் வருகிறீர்கள் என்றால், நீங்கள் பதவிக்காக வரவில்லை என்பது தெளிவு” என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். தொண்டனாக இருந்தாலும் தலைவனாக இருந்தாலும் கட்சிக்கு முழு விசுவாசம் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், “ஆட்சி பறிபோகும் என தெரிந்தே அவசர நிலையை தி.மு.க. எதிர்த்தது. ஆட்சி நமக்கு முக்கியமல்ல, ஜனநாயகமே முக்கியம் என்று நம்பியவர் கலைஞர் கருணாநிதி” என்று தந்தையின் புகழாரத்தைச் சூட்டினார்.

    தி.மு.க.வினர் வெற்றிக்காக மட்டும் அலைந்ததில்லை என்றும், கொள்கை அடிப்படையில் உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    இன்றைக்கு வெற்றி வாய்ப்பை நாம் இழந்திருந்தாலும், ஆட்சிப் பொறுப்பை நாம் இழந்திருந்தாலும், எதிர்க்கட்சி என்ற நிலையில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், நீங்கள் எல்லாம் இங்கு நம்முடைய கஜா என்கிற கஜேந்திரன் தலைமையில் வந்து சேர்ந்திருப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. ஏனென்றால், நாம் வெற்றி பெற வேண்டும்; தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்; எதிர்க்கட்சிகள் எல்லாம் தோற்க வேண்டும் என்ற நிலையில் தான் நாம் தேர்தல் களத்தைச் சந்தித்தோம்.

    நம்முடைய கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று கருதி நம்மோடு கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே பல இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள், “நாங்கள் வருகிறபோது, எங்கள் கூட்டணிக் கட்சியின் தலைவர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினிடத்தில் சொல்லிவிட்டுத் தான் வந்திருக்கிறோம்” என்று சொன்னார்கள்.

    அவர்கள் சொல்லிவிட்டுச் செல்லுகிற நேரத்தில் நான் சொன்னேன், “நீங்கள் செல்லுங்கள்; உங்களுடைய விருப்பம்; உங்களுக்கு இருக்கும் ஜனநாயகம்; நான் தடுக்க மாட்டேன். நாட்டிலே ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது; அதன் மூலமாக பி.ஜே.பி. ஆட்சி தமிழ்நாட்டில் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தான் அவர்களை நான் வழியனுப்பி வைத்தேன்.” எனவே, நம்முடைய தயவோடு நடைபெறும் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த நிகழ்ச்சியில் உறுதி எடுப்போம், உறுதி எடுப்போம், உறுதி எடுப்போம் என்று கூறி, மீண்டும் வந்திருக்கும் உங்கள் அத்தனை பேரையும் வருக, வருக, வருக என்று வரவேற்று என் உரையை நிறைவு செய்கிறேன் என்று ஸ்டாலின் கூறினார்.

    இந்த நிகழ்வு, தி.மு.க.வின் வேரூன்றிய அடித்தளத்தையும், ஜனநாயக நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. தொங்கு சட்டமன்ற சூழலில் அரசியல் சமன்பாடுகள் எப்படி மாறும் என்பதை நாடு உற்று நோக்குகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசட்டக்கல்லூரி மாணவிக்கு ரயிலில் பாலியல் சீண்டல்; காவலர் சிறைப்பிடிப்பு
    Next Article நள்ளிரவில் அதிரடி ஆக்‌ஷன்!. மாணவர் விடுதியில் அமைச்சர் சம்பத் திடீர் ஆய்வு!
    editor5

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.