பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிதாக வி த லீடர்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த அமைப்புக்கு தமிழக முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 20 லட்சத்துக்கு மேல் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், போதை இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடு அண்ணாமலை தலைமையில் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கான பூமி பூஜை வசந்த ராஜன் தலைமையில் நடைபெற்றது. அர்ச்சகர்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது.
