மழையின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணம் ஒத்திவைக்கப்பட உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி இன்று நாமக்கல்லில் தனது பிரச்சாரத்தை தொடங்கி வருகின்ற 29ஆம் தேதி வரை சேலம், திருச்செங்கோடு, மேட்டுப்பாளையம் குன்னூர், கரூர் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சார பயணத்தை மேற்கொள்ள இருந்தார்.
இந்த நிலையில் அடுத்த 10 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தனது பிரச்சார பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி ஒத்தி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இன்றுடன் நாமக்கல்லில் பிரச்சார பயணம் முடிவு பெற்று அடுத்த கட்ட பிரச்சாரம் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது