நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், அமைச்சரவை முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக் 5 அமைச்சரகளும், தற்போது 21 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். இந்த அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என விஜய் கூறியிருந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு தவெகவுடன் இணைந்த காங்கிரஸ்க்கு தற்போது ஆட்சியில் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தேர்தலுக்கு பின், சட்டமன்றத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி என பலர் வெளிப்படையாக அறிவித்தனர். தவெகவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தும் அவரது பேச்சை யாரும் கேட்கவில்லை. இன்று அதிமுகவின் நிலை மீண்டும் 2ஆக பிளவுப்பட்டு கிடக்கிறது.

தவெகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஆதாயம் கிடைக்கும் என சி.வி.சண்முகம் குரூப் நினைத்திருந்த நிலையில், அது கானல் நீராய் போனது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version