Close Menu
    What's Hot

    ஐடி கார்டில் சாதி பெயர் போட மாட்டோம்.. போடவே மாட்டோம்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை..!! அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது என்ன..??

    முடிவுக்கு வந்தது தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம்..!! பாக்யராஜ் மறைவுக்கு கேரள முதல்வர் இரங்கல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிட்டது..!! அன்பில் மகேஷ் பரபரப்பு பதிவு..!!
    Featured

    ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிட்டது..!! அன்பில் மகேஷ் பரபரப்பு பதிவு..!!

    editor5By editor5June 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 19 15
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ் சாதி விவரங்களையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த நடவடிக்கை தேசியக் கல்விக் கொள்கை (NEP-2020)-யின் ஒரு அங்கமான APAAR அட்டைத் திட்டத்தின் மறு உருவமே என்று விமர்சித்துள்ளார்.

    வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “பள்ளிக்குச் செல்லும் அனைத்து குழந்தைகளுக்கும் ஆண்டுதோறும் சாதிச் சான்றிதழ் பெறும் நடைமுறைக்கு மாற்றாக அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் முகவரி, சாதி விவரம், இரத்த வகை, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை இணைக்கப்படும். முதற்கட்டமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படும்” என்றார்.

    இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இன்று காலை தனது எக்ஸ் பக்கத்தில் இரண்டு பதிவுகள் வெளியிட்ட அன்பில் மகேஷ், “மாணவர்களின் அடிப்படைத் தகவல்கள் அடங்கிய அட்டையில் சாதி குறித்த விவரமும் இடம்பெறுவது தேவையற்றது. இரத்த வகை, ஆதார் எண் போன்ற அத்தியாவசியத் தகவல்களுடன் சாதி அடையாளத்தை இணைப்பது ஏன்? இடஒதுக்கீடு மற்றும் அரசின் சமூக நீதித் திட்டங்களைப் பயன்படுத்தும் இடங்களில் மட்டுமே சாதிச் சான்றிதழ் விவரங்களைப் பயன்படுத்தலாம்” என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும் அவர், “ஒளிந்திருந்த பூனை சீக்கிரம் வெளியே வந்துவிட்டது. இது தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் ஒரு அங்கமான APAAR (Automated Permanent Academic Account Registry) அட்டைத் திட்டமே. ‘ஒரே நாடு ஒரே அடையாள அட்டை’ என்ற அடிப்படையில் தமிழ்நாட்டு மாணவர்களின் சுயவிவரங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் திட்டம் இது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறிவந்த தவெக அரசு, இப்போது அதன் ஒரு பகுதியை வேறு வடிவில் அமல்படுத்துகிறது” என்று சாடினார்.

    “இரண்டாயிரம் கோடி என்ன, 10,000 கோடி கொடுத்தாலும் NEP-2020-ஐ ஏற்க மாட்டோம்” என்ற தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் உறுதியான நிலைப்பாட்டை நினைவுகூர்ந்த அன்பில் மகேஷ், மாணவர்களின் அடிப்படைத் தகவல்களை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் இந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்த விவகாரம் தமிழ்நாட்டில் கல்வித் துறையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் தனியுரிமை மற்றும் சாதி அடையாளம் சார்ந்த பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், அரசு இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

     

    anbil mahesh poiyamozhi Sengottaiyan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ் மக்களின் இதயங்களை வென்றவர் கே.பாக்யராஜ் ; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
    Next Article மத்திய கேபினெட்டில் மாற்றம்..!! நிர்மலாவுக்கு பதில் நிதி துறையை ஏற்கிறாரா சக்திகாந்த தாஸ்?
    editor5

    Related Posts

    ஐடி கார்டில் சாதி பெயர் போட மாட்டோம்.. போடவே மாட்டோம்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    June 27, 2026

    பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை..!! அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது என்ன..??

    June 27, 2026

    முடிவுக்கு வந்தது தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம்..!! பாக்யராஜ் மறைவுக்கு கேரள முதல்வர் இரங்கல்..!!

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐடி கார்டில் சாதி பெயர் போட மாட்டோம்.. போடவே மாட்டோம்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை..!! அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது என்ன..??

    முடிவுக்கு வந்தது தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம்..!! பாக்யராஜ் மறைவுக்கு கேரள முதல்வர் இரங்கல்..!!

    குஜராத்தில் புதிய புரட்சி..!! ‘பாரத் டாக்சி’ சேவையை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா..!!

    முதல்வர் விஜய் மீது ரகசியக் காப்பு குற்றச்சாட்டு..!! திமுக எம்.பி வில்சன் எழுப்பிய கேள்விகள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.