Close Menu
    What's Hot

    தென்மேற்கு பருவமழை எதிர்பார்ப்பை எட்டவில்லை.. தமிழகத்தில் 16% குறைவு!

    ஒரு கார் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. அரசு ஊழியர்களுக்கு நிதி அமைச்சகத்தின் அதிரடி உத்தரவு!

    ஆக.1 முதல்.. உயர்கிறது தபால் கட்டணம்..!! எவ்வளவு தெரியுமா..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»PF பணம் பெற இனி UPI போதும்..!! ஆகஸ்டில் வரவிருக்கும் புதிய மாற்றம்!
    Featured

    PF பணம் பெற இனி UPI போதும்..!! ஆகஸ்டில் வரவிருக்கும் புதிய மாற்றம்!

    editor5By editor5July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 45 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது முன்னதாக 2026 நிதியாண்டு தொடக்கத்திலேயே கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக தாமதமானது.

    இபிஎஃப்ஓ சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப அமைப்பு (CITES 2.01) தளத்தில் பல குளறுபடிகள் ஏற்பட்டன. பழைய பிஎஃப் கணக்குகளின் தரவுகள் புதிய தளத்தில் தென்படாதது, லாக்-இன் சிக்கல்கள், மெதுவான செயல்பாடு, உரிமைகோரல் செயலாக்கத்தில் தாமதம் உள்ளிட்ட புகார்கள் சந்தாதாரர்களிடமிருந்து வந்தன. இதனால் புதிய டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன் தளத்தை முழுமையாக சீர்செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும், அதன்பிறகு யுபிஐ இணைப்பு செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிகிறது.

    இந்த வசதி பீம் (BHIM) செயலி மூலம் இணைக்கப்படும். ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய தேசிய பண பரிவர்த்தனை கழகம் (NPCI) உடன் இணைந்து, சி-டாக் (C-DAC) தொழில்நுட்ப ஆதரவுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கை வங்கி கணக்குடன் இணைத்து, அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக (மருத்துவம், கல்வி, திருமணம், வீட்டுத் தேவை போன்றவை) தகுதியான தொகையை விண்ணப்பித்து பெறலாம். தற்போது ஆட்டோ-மோடில் ரூ.5 லட்சம் வரையிலான கோரிக்கைகளுக்கும் குறைந்தபட்சம் மூன்று வேலை நாட்கள் ஆகும் நிலையில், யுபிஐ மூலம் இது மிகவும் விரைவாக முடியும்.

    பொதுவாக, மொத்த பிஎஃப் இருப்பில் 50 முதல் 75 சதவீதம் வரை எடுக்க அனுமதிக்கப்படும்; குறைந்தபட்சம் 25 சதவீதம் ஓய்வுகால பாதுகாப்புக்காக வைக்கப்படும். இது கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு அவசர தேவைகளில் பெரும் நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இபிஎஃப்ஓ தளத்தை முழுமையாக சீர்செய்து, பாதுகாப்பான மற்றும் விரைவான சேவையை உறுதி செய்யும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

    money PF upi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றமா? CMDA விளக்கம்!
    Next Article மனு மட்டும்.. பணம் வேண்டாம்! மானாமதுரை வட்டாட்சியரின் அறிவிப்புக்கு பொதுமக்கள் பாராட்டு!
    editor5

    Related Posts

    தென்மேற்கு பருவமழை எதிர்பார்ப்பை எட்டவில்லை.. தமிழகத்தில் 16% குறைவு!

    July 29, 2026

    ஒரு கார் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. அரசு ஊழியர்களுக்கு நிதி அமைச்சகத்தின் அதிரடி உத்தரவு!

    July 29, 2026

    ஆக.1 முதல்.. உயர்கிறது தபால் கட்டணம்..!! எவ்வளவு தெரியுமா..??

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தென்மேற்கு பருவமழை எதிர்பார்ப்பை எட்டவில்லை.. தமிழகத்தில் 16% குறைவு!

    ஒரு கார் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. அரசு ஊழியர்களுக்கு நிதி அமைச்சகத்தின் அதிரடி உத்தரவு!

    ஆக.1 முதல்.. உயர்கிறது தபால் கட்டணம்..!! எவ்வளவு தெரியுமா..??

    மீண்டும் களத்தில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை! கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில் அதிரடி ரெய்டு!

    ரூ.7,000 கோடியில்.. பெண்களுக்காக முதல்வர் விஜய்யின் அசத்தல் மூவ்..!! என்ன தெரியுமா..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.