நீட் வினாத்தாள் கசிவை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சில மாணவர்கள் சிறப்பாக தயாராகி நல்ல மதிப்பெண்களைப் பெற்றனர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து, எதிர்க்கட்சிகள் மற்றும் CJP தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
CJP-யின் போராட்டம் குறித்துப் பேசிய சீதாராமன், “வினாத்தாள் கசிவு நடந்தபோது முதலில் அது எனக்குச் சற்று வருத்தத்தை அளித்தது, ஆனால் பின்னர் நான் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இன்னும் சிறப்பாகத் தயாரானேன், அதனால் எனது செயல்பாடு மேம்பட்டு நான் நன்றாகச் செயல்பட்டேன் என்று கூறும் இளைஞர்கள் உள்ளனர். எனவே, இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, அதை எதிர்கொண்டு, சிறப்பான வெற்றியைப் பெற்ற இளைஞர்களும் இருக்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசாங்கமும் பிரதமரும் பதிலளித்து வருகின்றனர்,” என்று கூறினார். இக்கருத்துகள் உடனடியாகவும் கடுமையாகவும் விமர்சிக்கப்பட்டன.
இந்தத் தர்க்கத்தின்படி பார்த்தால், நாட்டின் ஒவ்வொரு வினாத்தாளும் கசிவதைத்தான் அனுமதிக்க வேண்டும்” என்று சி.ஜே.பி செய்திதொடர்பாளர் அசுதோஷ் ரான்கா கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களான மகுவா மொய்த்ரா மற்றும் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோரும் அமைச்சரின் இத்தகைய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசுக்கும் சி.ஜே.பி பிரதிநிதிகளுக்கும் இடையிலான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நீட் விருகை விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்குவது மற்றும் போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது போன்ற கோரிக்கைகளில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனினும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கை குறித்து பதிலளிக்க அரசு சனிக்கிழமை பிற்பகல் வரை அவகாசம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
