தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1996-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் வெளியேறிய ஜி.கே.மூப்பனார் தொடங்கியதுதான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. இக்கட்சி 1996 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி போட்டு 41 தொகுதிகளில் போட்டியிட்டு 39 இடங்களில் வென்றது. அதேஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி போட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றது.

அதன்பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி போட்டதை எதிர்த்து வெளியேறிய ஜி.கே.மூப்பனார்,  புதிய தமிழகம், விசிகவுடன் கூட்டணி போட்டு தேர்தலை சந்தித்து தோல்வி அடைந்தார்.

இதனால் 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 32 தொகுதிகளில் போட்டியிட்டு 23 இடங்களில் வென்றது.

 

2001இல் மூப்பனார் மறைவுக்குப் பின்னர் தலைவரான அவரது மகன் ஜி.கே.வாசன் தமாகாவை 2002இல் காங்கிரசுடன் இணைத்தார். அதன்பின்னர் 2014 வரை காங்கிரஸில் தொடர்ந்தவர்,  அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ர தேர்தலின் போது காங்கிரசில் இருந்து வெளியேறி மீண்டும் தமாகாவை தொடங்கினார்.

இதன்பின்னர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தும் செயல்பட்டு வந்தவர் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்த நிலையில், தேர்தலில் தமாகா போட்டியிட்ட இடங்களில் தோல்வியை சந்தித்தது.

தற்போதைய அரசியல் சூழலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா என அக்கட்சியின் செயற்குழு கூடி முடிவு செய்த நிலையில்,

இன்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தேஜகூவில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்று மாதங்கள் கழித்து திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைய போவதாகவும் கூறப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தாங்கள் விருப்பப்பட்ட தொகுதிகள் தங்களுக்கு வழங்கப்படாதது விலகல் முடிவுக்கு  ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version