முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் திடீரென மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால், பாதுகாப்பை பலப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் திடீரென தலைமைச் செயலகம் வெளியே பொதுமக்களிடம் மனுக்களை பெறுவதற்காக வாகனத்தை நிறுத்துவதால் பாதுகாப்பு குறைபாடுகளை கலைவதற்காக தலைமைச் செயலகம் சுற்றியுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் பழுது நீக்கி (service) செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதால் அனைத்து கேமராக்களையும் முறையாக இயங்குகிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது
தமிழ்நாடு முதலமைச்சரை பாரப்பதற்காக தினமும் தலைமைச் செயலகம் வெளியே சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மாலை நேரங்களில் கூடி தமிழ்நாடு முதலமைச்சர் செல்லும் பொழுது அவருக்கு கையசித்து மகிழ்ச்சி வெளிப்படுகின்றனர் முதலமைச்சரும் அவரைப் பார்க்க வந்தவர்களுக்கு கை அசைத்து அவர்களை ஆரவாரப்படுத்துகிறார்
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருந்து பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ தினமும் வீட்டிற்கு செல்கிறார்
சில தினங்களுக்கு முன்பு திடீரென தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்திலிருந்து வெளியே செல்லும் பொழுது மனுக்களோடு நின்றிருந்த பொது மக்களிடம் பாதுகாப்பு வாகனங்களை நிறுத்த கூறி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்
தலைமைச் செயலகம் உள்ளே வருபவர்கள் பலத்த பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு உள்ளே வருகிறார்கள். ஆனால் தலைமைச் செயலகம் வெளியே நிற்கக்கூடிய பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வந்து நிற்கக்கூடிய பகுதியாக இருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்தனர்.
தலைமைச் செயலகம் வெளியே உள்ள ராஜாஜி சாலையில் ரிசர்வ் வங்கியில் இருந்து போர் நினைவு சின்னம் வரை உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் தலைமைச் செயலகம் உள்ளே உள்ள கண்ட்ரோல் ரூமில் நேரலையாக பார்க்க முடியும். காவல்துறையினர் அங்கு அமர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
முதலமைச்சர் திடீரென பாதுகாப்பு வாகனங்களை நிறுத்த கூறி மனுக்களை பெறுவதால் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படாமல் இருப்பதற்காக தலைமைச் செயலகம் சுற்றியுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் சரி செய்வது பழுது நீக்குவது என தற்போது செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சருக்கு மத்திய பாதுகாப்பு மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் உயரிய பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் தலைமைச் செயலகத்தை சுற்றியோ அல்லது முதலமைச்சர் வெளியே செல்லும் பொழுது மனுக்கள் கொடுப்பது போல ஏதேனும் தவறான செய்கைகளோ அல்லது பாதுகாப்பு குறைபாடு ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகளையோ செய்து விடக்கூடாது என்பதற்காக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களை பழுது நீக்குவது, சர்வீஸ் செய்வது என அனைத்து கேமராக்களையும் ஆய்வு செய்ய அதற்கான பொறியாளர்களை அழைத்து வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
