தேர்வுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், உயர்மட்ட சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப் பெரிய போராட்ட அலையை ஏற்படுத்தி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் நிலைக்கு தள்ளியது. இதையடுத்து, தேர்வு சீர்திருத்தங்களுக்கான நடவடிக்கையை பிரதமர் மோடி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில், அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பிரபல தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகணி தலைமையில்  தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் எதிர்காலமே தங்களின் முதன்மை முன்னுரிமை என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் விரைவில் நடைபெறவுள்ள தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தேர்வு முறையை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றும் வகையில் நந்தன் நிலேகனிக தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version