தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து, தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தவெக சார்பில் முதல் முறையாக விஜய் களம்காணவுள்ள நிலையில், வேட்பாளார் பட்டியல் இன்னமும் வெளியிடவில்லை.
மாறாக அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பிருக்கிறது என அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில், இதற்கான விளக்கத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் அதிமுகவுடனான உறவு சகோதரத்துவ அடிப்படையில் வலுவாக இருப்பதாக தெரிவித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்து பேசவில்லை எனவும் கூறினார்.
தமிழ்நாட்டில் பாஜகவின் பணி மிகக் குறைவானது எனவும் கூட்டணி கட்சிகளே பெருவாரியான பொறுப்புகளை மேற்கொண்டதாகவும் கூறினார்.
தேசிய ஜனநாயக் கூட்டணியை பொறுத்தவரை மூத்த சகோதரர் போன்று அதிமுக செயல்படுவதாக தெரிவித்த அமித் ஷா, அதிமுகவுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் கூறினார். விஜய் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தவெக வந்தால், எங்கள் வாக்கு வங்கியே பாதிக்கும். தமிழ்நாட்டில் அமைப்பு ரீதியாக பாஜகவின் பலம் குறைவு என்பது அனைவரும் அறிந்ததே என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
