ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இந்தியாவின் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்சில் ‘பாரத் இன்னொவேட்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் புத்தாக்கங்கள் நாட்டு நலனுக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகிற்கும் நீடித்த மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதே இந்தியாவின் நோக்கம் என்றார். இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து புத்தாக்கத்திற்கான தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியா தனது அறிவாலும் புத்தாக்கத்தாலும் உலகிற்குப் புதிய திசையைக் காட்டியுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். கணிதம் முதல் வானியல் வரையும் மருத்துவம் முதல் யோகா வரையும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் இந்தியாவின் பங்களிப்பே அடித்தளமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். தற்போது, இந்த பாரம்பரியத்திற்கு புதிய திசையையும், வேகத்தையும் அளித்திருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அதன்படி இந்தியாவின் பாதுகாப்புத்துறையும் புத்தாக்கத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், அணுசக்தித் துறையிலும் முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version