Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஈரான்-அமெரிக்கா மோதல்!. மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அவசர எச்சரிக்கை!.
    Featured

    ஈரான்-அமெரிக்கா மோதல்!. மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அவசர எச்சரிக்கை!.

    Editor web3By Editor web3March 2, 2026Updated:March 2, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    home ministry warns states
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே மூண்டுள்ள நேரடி போர் பதற்றம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி மையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தங்கள் கவலையைத் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அரசும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் இந்த அசாதாரண சூழலால் இந்தியாவில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சகமானது மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு (DGP) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

    அதில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஷியா பிரிவு அமைப்புகள் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்கள் போராட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் தூதரகங்களுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    வன்முறையைத் தூண்டும் வகையில் உரையாற்றும் “ஈரான் ஆதரவு தீவிரவாதப் பேச்சாளர்களை” (Pro-Iran radical preachers) அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் கண்காணிப்பு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகளைக் கண்காணிக்கவும், ஈரான் ஆதரவு மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக-அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகளைத் தீவிரமாக கவனிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், ஈரானில் வசிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அங்குள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், இந்தியத் தூதரகத்தின் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார தாக்கம் குறித்து ஆலோசிக்க பிரதமர் தலைமையில் உயர் மட்டக் குழு கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.


    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐக்கிய அரபு அமீரகத்தின் பங்குச் சந்தைகள் மூடல்..! விருந்தாளிகளே முக்கியம் என நெகிழ வைத்த அரசு..!
    Next Article 40 ஆண்டு கால திட்டம்!. பயங்கரவாதம் வேரறுக்கப்படும்!. நெதன்யாகு ஆவேசம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு இவர்கள்தான் காரணம் –வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.