நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத், இன்றைய இளம் பெண்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்ட கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான மாணவர் போராட்டங்கள் குறித்து “Gen Z Protest Reels” என விமர்சித்திருந்த கங்கனா ரணாவத், தற்போது “மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றும் இளம் இந்து பெண்கள்” குறித்து நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “உண்மையாக சுயமாக வாழும் பெண்கள் தங்களது சுதந்திரத்தை தாங்களே சம்பாதிக்கிறார்கள். அவர்கள் துணிச்சலான முடிவுகளை எடுக்கிறார்கள், தங்களது செயல்களுக்கு முழுப் பொறுப்பும் ஏற்கிறார்கள். ஆனால் குடும்பத்தைச் சார்ந்தே வாழ்ந்துகொண்டு சுதந்திரம் பற்றி பெருமை பேசுவதால் மட்டும் ஒருவர் சுயாதீனமானவராக மாற முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இன்றைய மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றும் சில இந்திய இளம் பெண்களை நான் ‘Generation Gutter’ என்று அழைக்கிறேன். அவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்குவதில்லை; குடும்பப் பொறுப்புகளையும் ஏற்கத் தயாராக இருப்பதில்லை. அதே நேரத்தில் மது, போதைப்பொருள், கட்டுப்பாடற்ற வாழ்க்கை ஆகியவற்றையே சுதந்திரம் என்று பெருமையாகக் கூறி, பெற்றோரின் வருமானத்தைச் சார்ந்தே வாழ்கிறார்கள்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதோடு, “சுயமாக வாழ்வதற்கு முன் அதற்கான பொறுப்பையும் தகுதியையும் சம்பாதிக்க வேண்டும். பொறுப்பில்லாத சுதந்திரம் என்பது உண்மையான சுதந்திரம் அல்ல” என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

கங்கனா ரணாவத்தின் இந்த சமீபத்திய பதிவு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version